Loading...

வாலிபர் பகுதி: அஷோர்


Mountain View

For Auto Scrolling Click Here

-->

வாலிபர் பகுதி: அஷோர் சீட்டு மடியிலே போடப்படும் காரிய சித்தியோ கர்த்தரால் வரும் நீதி:16:33 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக: எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே, ஒரு காரியம் ஜெயமாய் நடக்க வேண்டுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நாம் முயற்சிகளை எடுக்கலாம்,செயல்படலாம். ஆனால் அது கர்த்தராலே தான் வாய்க்கும் என்று அறிந்து கோள்ள வேண்டும். ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று எண்ணி எவ்வளவோ முயற்சிகள் நாம் எடுத்தாலும் அதை வாய்க்கபண்ணுவது கர்த்தர். “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா சங்கிதம் : 127:1 1) ஒரு காரியம் எப்பொழுது ஆசிர்வாதமாகயிருக்கும்: A)தேவசித்தம் B)தேவனுடைய வேளை வரவேண்டும் C)தேவனுடைய வழியிலே செயல்படவேண்டும் இவைகள் இருந்தால் தான் ஆசிர்வாதமாகயிருக்கமுடியும். அ) தேவ சித்தமாக இருக்கவேண்டும்: ஒரு காரியம் தேவசித்தமுள்ளதாயிருந்தால்அது அழகாக கூடி வரும். “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார் நமக்கு சித்தமான யாவையும் செய்கிறார் சங்கிதம்:115:3 கர்த்தர் தமது சித்தத்தை நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேற்றுவதற்காகவே ராஜரிகம் பண்ணுகிறார்.அவருக்குள் தாம் நாம் பிழைக்கிறோம் அசைகிறோம், இருக்கிறோம்[அப்:17:28] ஆகவே தான் இயேசு “ உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யபடுகிறது போல பூமியிலேயும் செய்யபடுவதாக” [மத்:6-10] என்று சீடர்க்ளூக்கு ஜெபம் பண்ண கற்றுகொடுத்தார். இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெபம் பண்ணிய பொழுது “அப்பா பிதாவே எல்லாம் உம்மாலே கூடும்: இந்த பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்து போடும்.ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்றார். [மாற்:14:36] ஆ) தேவனுடைய வேளை வரவேண்டும்: “நீதியை செய்ய கர்த்தருக்கு வேளை வந்த்து---[சங்:119:126] தேவனுடைய வேளையிலே காரியங்கள் கைகூடி வரும்.இயேசுகிறிஸ்துவின் முதல் அற்புதத்தை நாம் அறிந்திருக்கிறோம். கானாவூரில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டிற்கு இயேசு அழைக்கப்பட்டிருந்தார்.அந்த திருமண வீட்டிலே திராட்சைரசம் குறைவுபட்டது. அப்போது மரியாளோ, இயேசுவிடம் திரட்சைரசம் குறைவுப்பட்டது என்றார். அதற்கு இயேசு “ இன்னும் என் வேளை வரவில்லை” என்றார், பின்பு இயேசு அற்புதத்தை செய்தார். அந்த திருமண வீட்டில் தண்ணிரைத் திராட்சைரசமாக மாற்றி அங்கே பரிமாறச் செய்தார்[யோவான்:2-1-11] ஈ) தேவனுடைய வழியிலே செயல்படவேண்டும்: கடவுளூடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதின் மூலமும், அவருடைய நியமங்களை பின்பற்றுவதன் மூலமும் கடவுள் மீது நமக்குள்ள உண்மையான அன்பை காண்பிக்கிறோம். 1 யோவான் 5:3 நாம் எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும். நம்முடைய ஜெபத்தை விசுவாசமாகவும், மனத்தாழ்மையாகவும், உள்ளபூர்வமாகவும் இருக்கவேண்டும். [மாற்:11] “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்” லூக்:18:1 கடவுளுக்கு பிரியமில்லாத பழக்கவழக்கங்களை நாம் அறவே ஒதுக்கித்தள்ள வேண்டும்; 1 கொரி:6:9,10 தேவன் வெறுக்கிற காரியங்களை வெறுத்து அவர் விரும்புகிற காரியங்களை செய்யும் பொழுது அவருக்கு பிரியமாக நாம் வாழலாம் –ரோமர்: 12:9 ஒரு வேளை மனுஷ ஞானத்தினால் அல்லது பணபலத்தினால் சில காரியங்களை உலகத்தார் சாதித்து கொண்டிருக்கலாம் ஆனால் அது மாயமானது. ஆனால் தேவனால் கைகூடிவருகிற காரியம் ஆசிர்வாதம் நிறைந்த்தாய்க் காணப்படும்,சரியான வேளையிலே அவர் நமக்கு கட்டளையிடுவார்… ஆமென் Posted On: 09/05/2015 நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை நான் உங்களை தெரிந்து கொண்டேன்:நீங்கள் என் நாமத்தினாலே பிதாவை கேட்டுக் கொள்வது எதுவோ அதை உங்களுக்கு கொடுக்கதக்கதாக நீங்கள் போய் கனி கொடுக்கும் படிக்கும் உங்கள் கனி நிலைத்து இருக்கும் படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன் [யோவான் 15:16] எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே! எப்படியோ வாழந்து கொண்டிருந்த நம்மை தேவன் தெரிந்து கொண்டு அவரோடு நம்மை இணைத்து இருக்கிறார் என்று நினைத்தோமானால் தேவனுக்கு நாம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. நம்மை அவர் தெரிந்து கொண்டதுமின்றி நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்வது எதுவோ அதை அவர் உங்களுக்கு கொடுப்பார் என்று நம் தேவன் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை அவர் எப்போது கொடுப்பார் நாம் கனி கொடுக்கிறவர்களாகய் இருக்கும் போது அதை பெற்று கொள்ளமுடியும். நாம் தனித்து இருந்தோமானால் கனி கொடுக்கமுடியாது. நாம் தேவனோடு இணைந்திருந்தால் மாத்திரமே கனி கொடுக்கமுடியும் இதை தான் வேதாகமத்தில் பார்க்கிறோம் “என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன் கொடியானது திராட்சை செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனி கொடுக்கமுடியாது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்கமாட்டீர்கள்.[யோவான் 15-4] ஆகையால் நாம் எப்போதும் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும் நாம் தேவனோடு இணைந்திருந்தோமானால் தேவன் முதலில் நமக்கு சில கனிகளைக் கொடுப்பார் அது என்னவெனில் :ஆவியின் கனியோ அன்பு,சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்[கலா 6:22]இப்படிபட்ட கனிகள் பெற்றுக் கொண்ட நாம் எப்படிபட்டவர்களாக காணப்படவேண்டும்? பிறருடைய பாரங்களை சுமக்கிறவர் ஆக, பிறருக்காக ஜெபிக்கிறவர்களாக, தேவனுக்கு எதையாவது செய்கிறவர்களாகவும், ஒருவரில் ஒருவர் அன்பாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக தேசத்திற்காகவும், மக்களுக்காவும் ஜெபிக்க வேண்டும். இப்படிபட்ட கனிகள் பெற்ற நாம் எப்படிபட்டவர்களாக இருக்க வேண்டும் என நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறுகிறதாவது “நான் உங்களில் அன்பாயிருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது [யோவான் 15:12] நம் சகோதரரில் சிலர் சோர்ந்து காணப்படும்போது நம் சமயத்தை ஒதுக்கி அவர்களிடதில் சென்று அன்பான வார்த்தைகளை கொண்டு அவர்களிடத்தில் பேசுகிறோமா?! தேவனுடய அன்பை குறித்து சொல்லி அவர்களை தேற்றுகிறோமா சற்று யோசிப்போம்! நாம் இரட்சிக்கபட்ட காலத்தில் ஒவ்வொன்றுக்காக ஜெபித்தது உண்டு? நம் தேசத்திற்காக எவ்வளவு நேரம் ஜெபித்ததுண்டு? ஆனால் இப்பொழுது நம்முடைய ஜெபம் எப்படி இருக்கிறது? . நம் தேசத்தில் எங்கு பார்த்தாலும் பஞ்சம், நோய்கள், கொள்ளை, கொலை, விபத்து, என்று அனேக காரியங்களை பார்க்கிறோம். இதற்காக நேரத்தை ஒதுக்கி ஜெபிக்கிறோமா? நீங்கள் நினைக்கலாம் இவையெல்லாம் கேட்கும் போது தேவனுடய வருகையின் அடையாளம் என்று! ஆம் அது உண்மை தான், ஆனாலும் நாம் தேசத்திற்காகவும், தேசத்தின் மக்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். அவர்களும் தேவனை ஏற்றுகொள்ள வேண்டும்.தேவன் நமக்கு கனிகளை கொடுத்து இருப்பது நமக்காக மட்டுமன்றி அதை கொண்டு பிறருக்கும் உதவுகிறாதாய் இருக்க வேண்டும். தேவன் நமக்கு ஒன்று கொடுத்தால் அதை நாம் வர்த்திக்க பண்ண வேண்டும் அதை வாங்கி நமக்குள்ளே வைத்துக் கொள்வோமானால் அது நமக்கும் பிரயோஜனமாயிருக்காது பிறருக்கும் பிரயோஜனமாயிருக்காது. உதாரணத்திற்காக தாலந்தின் உவமை நினைத்து கொள்வோம். உள்ளவனுக்கு கொடுக்கப்படும் இல்லாதவனுக்கு உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே சகோதர,சகோதரிகளே, தேவனிடத்தில் கனிகளை பெற்றுக் கொண்ட நாம் இன்றிலிருந்து ஒர் தீர்மானம் எடுப்போம் தேவன் நமக்கு கொடுத்த கனிகளை பெருகச் செய்து தேவனுக்கென்று கனி கொடுக்கிறவர்களாய் மாறுவோம். நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார் எனக்கும் சீஷராயிருப்பீர்கள்[யோவான்:15:8] –ஆமென். Posted on: 23/02/2015 என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப் படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் – மத் 6:25 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக! கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நாம் அனேக காரியங்களை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அன்றாட தேவைகளை குறித்தும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதே சமயத்தில் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றிய கவலையும் பாரமும் காணப்படுகிறவர்களாகிய நமக்கு கவலையை மேற்கொள்ள பரிசுத்த வேதாகமம் சில வழிகளைக் காண்பிக்கிறது. இத்தகைய காரியத்தை நாம் வேதத்தைக் கொண்டு பார்ப்போம். 1.முதலாவது தேவன் மேல் வைத்த விசுவாசத்தினால் கவலையை மேற்கொள்ள முடியும் என்பதை பார்க்கலாம். கர்த்தராகிய இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறிவிடுகின்றோம், நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறின பின்பு நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு தேவைக்காகவும் நம்மைக் காட்டிலும் தேவன் நமக்காக கவலைப்படுகிறவராயிருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும். தேவன் மேல் வைக்கும் விசுவாசம் கவலைகள் அனைத்தையும் நம்மை விட்டு விலக்கிவிடும், அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்து நம் பாவத்திற்காக மட்டும் சிலுவையில் அறையப்பட்டார் என்று விசுவாசிப்பது மாத்திரமல்லாமல் அத்துடன் என்னுடைய தேவைகளையும் சந்திக்க வல்லவர் என்கிற விசுவாசமும் நமக்குத் தேவை. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கவலையை மறந்து விட்டு விசுவாசத்தை நோக்கி ஓட வேண்டாம் என்பதுதான் நம்மைக் குறித்து தேவனுடைய வாஞ்சையாயிருக்கிறது. ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள் – 1 பேதுரு 5:7, எனவே கவலைகளை ஒழித்து விட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர தேவனாகிய இயேசுவைப் பிடித்துக் கொள்வோம். 2.இரண்டாவது ஜெபத்தைக் கொண்டு கவலைகளை எடுத்துப் போடுவோம். வேதம் இப்படியாக சொல்லுகிறது, ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் – பிலி 4:6 நாம் தேவனை நோக்கி ஜெபிக்கிறோம், விண்ணப்பம் செய்கிறோம் ஆனாலும் திரும்பவும் எந்தக் காரியத்துக்காக ஜெபித்தோமோ அதே காரியத்தைக் குறித்து கவலைப்பட்டு, பாரப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற அவிசுவாசமே நம்முடைய கவலைக்கும் பாரத்துக்கும் காரணமாய் அமைந்து விடுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வேதம் சொல்லுகிறது, கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு அவர் உன்னை ஆதரிப்பார் – சங் 55:22 ஆகவே கவலைப்பட வேண்டாம், கலங்க வேண்டாம் கர்த்தரே சொல்லி விட்டார் நான் உங்கள் பாரங்களை சுமந்து கொள்கிறேன். நீங்கள் சும்மா இருங்கள் என்று சொல்வதை நாம் மேலே உள்ள வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. 3.மூன்றாவதாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் கவலைகளை எடுத்துப் போடுவோம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்பது ஜீவனுக்கும் தேவபக்திக்கும் தேவையான எல்லாவற்றையும் நமக்குத் தருகிறதாயிருக்கின்றது. அபிஷேகம் என்றதும் அனேகர் நினைப்பதுண்டு சத்தமிடுவதும் கைகளை தட்டுவதும், அன்னிய பாஷைகளைப் பேசுவதும் மட்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அனால் ஒரு தேவபிள்ளை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நிறைந்து உன்னதமான ஆவிக்குரிய வாழ்க்கையை வாழும் போது மட்டுமே அந்த அபிஷேகத்தால் நம்முடைய கவலைகள் பாரங்கள் எல்லாம் மாறிப் போகும். அதுமட்டுமல்லாமல் தேவனோடு கூடிய சந்தோஷமும் நிலைத்திருக்கும். இப்படியாக இருக்கும் போது மட்டுமே நம்முடைய உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டுக் கொண்டேயிருப்பான். அதுமட்டுமல்லாமல் தேவனை நாம் முழுமனதோடு துதிக்க முடியும், மற்றவரை பெலப்படுத்த முடியும் என்பதாக அனேக காரியங்களை நாம் வேதத்தில் இருந்து பார்க்க முடிகிறது, எனக்கு அருமையான சகோதர சகோதரிகளே கவலைப் படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்டுவான் [ மத் 6:27 ] ஆகவே கவலைப் படுவதை விட்டுவிட்டு கவலையிலிருந்து விடுதலையாக தேவன் நமக்கு தந்த வேதாகமத்தை கொண்டு ஜெயம் எடுப்போம். எப்பொழுது மேலே சொல்லப்பட்ட காரியம் நடக்குமென்றால், வேதம் சொல்லுகிறது, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் – சங்கீதம் 37:4. ஆமென் வாலிபர் பகுதி: அஷோர் Posted on: 12/01/2015 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் – பிலி 4:4 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக, எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே தேவனுடைய பிறப்பின் நாளை கொண்டாடி விட்டு, புது வருஷத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதுவருடத்தில் தேவனிடத்திலிருந்து மாறாத வாக்குத்தத்தங்களையும், அவருடைய பரிசுத்த அன்பையும் பெற்றிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன். அடுத்ததாக எப்பொழுது இந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று காத்திருக்கிறவர்களுக்கு தேவன் சொல்லுகிற அறிவுரை என்னவெனில், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்ககடவோம். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் [ எபி 10:23 ] ஒருகாரியத்தை மறக்க வேண்டாம், நாம் தேவனுடைய பிள்ளைகள் ஆகவே தேவன் நிச்சயமாக நம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றுவார் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் சில வேளைகளில் சிறிது தாமதமாகும் சூழ்நிலை உண்டாகிறது ஏனென்றால் நாம் அவருடைய வழிகளை விட்டு இந்த உலகத்தேவைக்காக மாத்திரம் தேவனை தேடும் போது அவர் நமக்கு சில காரியங்களைக் கற்றுக் கொடுக்கும்படியாக இப்படி செய்கிறார் என்பதுதான் உண்மை. மறக்க வேண்டாம் நாம் இந்த உலகத்தின் செல்வத்தில் செழிப்பாக இருப்பதினால் மட்டும் நாம் பாக்கியவான்கள் என்று அழைக்கப்பட மாட்டோம். மாறாக வேதம் சொல்லுகிறது கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். [ சங் 1:2 ] இரட்சிக்கப்பட்ட போது நாம் எவ்வாறு தேவன் மேல் தாகமாய் இருந்தோமோ அதே தாகத்தை ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும், அப்பொழுதுதான் நாம் பிசாசின் தந்திரங்களைக் கண்டு பிடிப்பதுடன் மாத்திரமல்ல நம்முடைய விலையேறப் பெற்ற வாக்குத்தத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நம்முடைய நோக்கம் எல்லாம் எப்பொழுதும் இயேசு இயேசு என்று கடைசி மூச்சு வரை சொல்லிக் கொண்டே நடப்போம். வேதம் சொல்லுகிறது, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் – சங் 37:4 தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்போது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் – மாற்கு 11:24 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக, எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே நீங்கள் ஜெபிக்கும் போது நான் ஜெபித்தக் காரியங்கள் எல்லாம் பெற்றுக் கொள்வேன் என்று விசுவாசியுங்கள் அப்போது அவைகள் உங்களுக்கு உண்டாகும். இவைகள் எப்போது நடக்கும் என்றால் நீங்கள் கர்த்தருக்குள் இருக்கும்போது மட்டுமே நடக்கும் என்பதை மறக்க வேண்டாம். வேதத்தில் இப்படியாக பார்க்கிறோம், வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை [ மத்தேயு 24:35 ] இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் அவர் இப்படியாக தன்னை தேடி வருகிறவர்கள் தன்னை விசுவாசிக்கும் படியாக இந்த வசனத்தை சொல்வதை பார்க்க முடிகிறது, இப்படி விசுவாசிக்கிறவர்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொண்டதை நாம் பார்க்க முடிகிறது உதாரணமாக பன்னிரண்டு வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக் கொண்டு அவர் பின்னாலே வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள் [மத் 9:20,21] அந்த ஸ்திரீயின் விசுவாசத்தை பாருங்கள் தேவனின் உடையில் இருந்து வல்லமை புறப்படும் என்பதை அவள் விசுவாசித்ததால் அதன்படியே அவள் அற்புதத்தை பெற்றுக் கொண்டாள் அதுமட்டுமன்றி அவள் தெரிந்து கொண்டதை பிறருக்கும் கற்றுக் கொடுத்தாள் என்பதையும், மேலும் நாம் மத் 14:36 அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாக வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டார்கள் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். அனேகருடைய விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணினாள். இரண்டாவதாக நூற்றுக்கு அதிபதியை எடுத்துக் கொள்வோம் தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் வைத்தான் எப்படியெனில் அவனுடைய வேலைக்காரன் கொடிய நோய்யினால் வேதனைப்படுகிறான். இதன் நிமித்தம் இயேசுவை வேண்டிக் கொண்டான் அதற்கு இயேசுவும் நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார். ஆனால் அவன் விசுவாசத்தைப் பாருங்கள் ஆண்டவரே நீர் என் வீட்டிற்கு பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்போது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான். ஆம் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே நாம் தேவனிடத்தில் எவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோமோ அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசிக்க வேண்டும் விசுவாசம் என்பது ஜெபத்தில் ஆணிவேர் என்பதை மறக்க கூடாது. வேதம் இப்படியாக சொல்லுகிறது விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும் [ எபிரெயர் 11:6 ] ஆகவே விசுவாசத்தோடு ஜெபிப்போம், ஒருவருக்கொருவர் பாரப்பட்டு ஜெபிப்போம் ஜெயத்தைப் பெற்றுக் கொள்வோம். கர்த்தர் தாமே இந்த வார்த்தையைக் கொண்டு உங்கள் இருதயங்களில் இடைப்படுவாராக. ஆமென். Posted on: 15/11/2014 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான் – மத் 16:26 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக. எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொள்வது மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலே சொல்லப்பட்ட வசனத்தை நாம் இரண்டு விதத்தில் நாம் பார்க்க போகிறோம் 1.உலகப் பிரகாரம் 2.ஆவிக்குரிய பிரகாரம் 1.உலகப் பிரகாரம் இந்த உலகத்தில் வாழ்கின்ற காலக் கட்டத்தில் பணத்திற்காகவும் பொருளுக்காகவும் ஓடி வேலை செய்து இந்த உலகத்தை ஆதாயப் படுத்திக் கொண்டாலும் தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை கொடுக்காமல் தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் நியாயத்தீர்ப்பு நாளில் தேவ சமுகத்தில் நிற்கும் போது பணத்தையோ அல்லது பொருளையோ கொடுத்து பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது, அநேகர் நினைப்பதுண்டு வேலை செய்து அதிகமாக சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொண்டோமானால் நன்றாக இருக்கலாம் என எண்ணி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் பணமும் பொருட்களும் தேவை தான். அது தவறில்லை ஆனால் அதை மட்டுமே சார்ந்து வாழ்ந்துக் கொண்டு தேவ சமுகத்தை விட்டு விலகும் போது தன் ஜீவனை நஷ்டப் படுத்திக் கொள்கிறான். தேவன் நம்மை இதற்காக மட்டும் படைக்கவில்லை. 2.ஆவிக்குரிய பிரகாரம் மனுஷன் இந்த உலகத்தில் ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொண்டாலும் அவன் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு அதன் நிமித்தம் ஒரு லாபமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சென்னையிலிருக்கும் போது சபையிலே ஒரு சிலரைப் பார்த்தேன் அவர்கள் சபைக்குரிய காரியங்களில் நன்கு வளர்ந்தவராக காணப்பட்டார்கள் அதுமட்டுமன்றி சபைக்கு ஆத்துமாக்களைச் சேர்க்கிறவர்களாகவும், தெருக்களில் சென்று ட்ராக்ஸ் கொடுக்கிறவர்களாகவும் காணப்படுகிறார்கள் ஆனால் அவர்கள் வாழ்கின்ற இடத்தில் சென்றுப் பார்க்கும் போது அவர்கள் சிலரை அவதூறாக பேசுகிறவர்களாகவும் காணப்பட்டனர். அனேகரை தேவ சமுகத்தில் சேர்க்கிறவர்களாக காணப்படுகிற அவர்கள் முதலில் தான் சரியான நிலையில் தான் இருக்கிறோமா என்பதை அறிய வேண்டும். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது ஒரே ஊற்றிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? அதுமட்டுமல்லாமல் துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது, என் சகோதரரே இப்படியிருக்கலாகாது [ யாக் 3:11,10 ] ஆம் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனுக்கென்று கொடுக்க வேண்டிய நேரத்தை தேவனுக்கென்று கொடுக்க ஆயத்தப் படுவோம். வேதத்தில் பார்க்கிறோம் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் [ லூக் 20:25 ] என்று தேவன் இந்த உலகத்தில் வாழ்ந்த காலக் கட்டத்தில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். தன் ஜீவனை காக்க தேவனுக்கென்று நேரத்தை ஒதுக்கவும் ஊழியத்திலிருக்கும் சகோதர சகோதரிகளும் சற்று தன்னைத் தான் நிதானித்து அறிய வேண்டும். முதலில் நம்மை பரலோகத்திற்கு தகுதி படுத்திக் கொண்டு பிறகு மற்றவரையும் ஆயத்தப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். கர்த்தர் தாமே இந்த வார்த்தையை கொண்டு நம்முடன் பேசுவாராக ஆமென். Posted on: 09/10/2014 அவரோ அவர்களை அழிக்காமல் இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார், அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல் அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார் C சங் 78:38 குறிப்பு: நாம் எப்பொழுதும் தேவனுடைய கோபத்தை தனிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே தேவன் ஒரு நபரையோ அல்லது தேசத்தையோ நேசிக்கிறார் என்றால், அவர்கள் சிறிய தவறு செய்தால் கூட தேவன் உடனே சரி செய்வார். ஏனென்றால் ஒரு மனுஷனிடம் துன்மார்க்கமான காரியங்கள் வரும் போது நாம் அவருடன் உலாவ முடியாது என்று வேதம் சொல்லுகிறது, ஏனென்றால் அவர் தீமையைப் பார்க்கமாட்டாத சுத்த கண்ணராய் இருக்கிறார் என்பதை ஒரு போது மறக்க வேண்டாம். இத்தகயை காரியத்தைத் தான் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். யோனா அதிகாரத்தை பார்ப்பீர்களால் தெரியும் அவர் நினிவேயை எவ்வாறாக நேசித்தார், ஆகவேதான் நினிவே தவறு செய்த போது, அவர் ஒரு யோனாவை தெரிந்து கொண்டு அங்கே அனுப்புகிறார். ஆனால் யோனாவோ கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்கு போகிற ஒரு கப்பலைக் கண்டு கூலி கொடுத்து தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி அவர்களோடே தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறினான் [யோன-3] கர்த்தர் நினிவேயை நேசித்ததின் நிமித்தம் யோனாவை சிட்சித்தார் என்பதை அதே அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம், எப்படியென்றால் கடலில் பெருங்காற்றை வரவழைத்து கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமன்றி யோனாவை மீனின் வயிற்றிலே இராப்பகல் மூன்று நாள் இருக்க வைத்தார், அப்பொழுது யோனா தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தார். தேவன் யோனாவின் விண்ணப்பத்தை கேட்டு , மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது, யோனாவும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். யோனாவுக்கு தேவனுடைய வார்த்தை இரண்டாம் தரம் உண்டாகி நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய் நான் உனக்கு கற்பிக்கும் வர்த்தையை அதற்கு விரோதமாய் பிரசங்கி என்றார். அவனும் பிரசங்கித்தான், அப்போது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து ஏற்றுக் கொண்டு அக்கிரமத்தை விட்டு விலகி தேவனை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்கள் கிரியைகளைப் பார்த்து தெரிந்து கொண்டார், ஆகவே தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு அதைச் செய்யாதிருந்தார். [ யோனா 3:10 ] ஆனால் யோனாவிற்கோ தேவன் செய்தது பிரியமில்லாமல் இருந்தது. ஆனால் இந்த தவறை ஒரு செடியைக் கொண்டு உணர்த்தினார் என்பதை நாம் யோனா புஸ்தகத்தில் கடைசி அதிகாரத்தைப் பார்க்கும் போது அறிய முடிகிறது. ஆம் பிரியமானவர்களே, தேவன் நம்மையும் இந்த தேசத்திற்கு கொண்டுவந்ததற்கு ஒரு நோக்கம் உண்டு. முதலாவது நாம் தேவனுடைய குறிக்கோளை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். நாம் இந்த நோக்கத்தை அறியாமல் நடப்பதினால் தான் தேவன் நம்மை சிட்சிக்கிறார் என்பதை ஒருபோது மறக்க கூடாது. சிலர் இதை அறியாமல் தேவன் என்னை ஏன் தண்டிக்கிறார் என்று தேவனையே குறை சொல்வதுண்டு. தேவனுடைய ஒவ்வொரு சிட்சைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வேதம் சொல்லுகிறது என் மகனே நீ கர்ததருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே அவர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள் 3:10,11 கர்த்தராகிய இயேசு தாமே இந்த வார்த்தையின் மூலம் நம் ஒவ்வொருவருடனும் இடைப்படுவாராக. ஆமென். Posted on: 07/09/2014 என் வாக்குக்குச் செவிகொடுங்கள் அப்போது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் C எரேமியா 7:23 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக! எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனுடைய வார்ததைக்கு நாம் செவிக் கொடுக்கும் போது தேவன் நம் மேல் பிரியமாயிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் நம்மை தமக்கு தாசனாகவும், சிநேகிதனாகவும் தெரிந்துக் கொள்கிறார் வேதத்தில் தேவன் இப்படியாக சொல்லுகிறார். என் தாசனாகிய இஸ்ரவேலே நான் தெரிந்துக் கொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் நான் உன்னை வெறித்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் திகையாதே நான் உன் தேவன் என்று தமக்குச் செவிக் கொடுக்கிறவர்களைப் பார்த்து தேவன் ஏசாயா 41:8-10ல் இவ்வாறாக சொல்லுகிறார், மேலே சொன்ன வசனத்தை உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன். வேதத்தில் தேவனுக்கு பிரியமாகயிருந்தவர்களை தேவன் எவ்வாறு அழைக்கிறார் என்று சற்று பார்ப்போம். 1.ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவனை விசுவாசித்ததின் நிமித்தம் ஆபிரகாமை தேவன் ஆசீர்வதித்தார் மேலும் அவர் மூலமாய் உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று நாம் ஆதியாகமம் 22:18ல் வாசிக்கிறோம், அதுமட்டுமன்றி அவர் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான் என்பதை நாம் யாக்கோபு 2:23ல் பார்க்க முடிகிறது. 2.தாவீதை எடுத்துக் கொள்வோம் தேவன் மேல் நம்பிக்கையுள்ளவனாக காணப்பட்டான் அதுமட்டுமல்லாமல் வைராக்கியம் நிறைந்தவனாகவும் தேவனை தனக்கு முன்பாக வைத்து எல்லாவற்றையும் செய்ததினிமித்தம் நாற்பது வருஷகாலமாய் ராஜாவாக இருந்த சவுலை தேவன் தள்ளி தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். பின்னும் அவனை குறித்து என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சாட்சியும் சொன்னார் என்பதை நாம் அப் 13:22ல் பார்க்க முடிகிறது. 3.யோபுவை எடுத்துக் கொள்வோம் நாம் யோபுவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் முதல் வசனத்தை திருப்பும் போது, அந்த வசனம் இப்படியாக சொல்லுகிறது, யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும் மற்றும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான் என்று அவரைப் பற்றி தேவன் சாட்சிக் கொடுக்கிறார். பாருங்கள் வசனம் என்ன சொல்லுகிறது, என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவரைப் போல பூமியில் ஒருவனும் இல்லை என்பதை யோபு 1:8ல் பார்க்க முடிகிறது. 4.கடைசியாக, தானியேலை எடுத்துக் கொள்வோம் இவர் மிகவும் வைராக்கியம் நிறைந்த மனிதன் எப்படியெனில் ராஜா உண்ணும் போஜனத்தினாலும், திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுபடுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான் என்பதை தானியேல் 1:8ல் நாம் வாசிக்க முடிகிறது.ஆகவே தேவன் தானியேலைக் குறித்து இவ்வாறாக சாட்சிக் கொடுக்கிறார், நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்று தானியேல் 9:23ல் வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆம் பிரியமானவர்களே, முதலாவது தேவனுக்கு பிரியமாக வாழ்வதற்கு முயற்சி செய்வது அவசியம். இப்படியாக நாம் வாழும் போது மட்டுமே வாழ்க்கையில் அதிக பலன்களை பெறமுடியும். பாருங்கள் மேலே குறிப்பிடப்பட்ட தாசர்கள் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்ததால், தேவன் அவர்களை இவ்வாறாக அழைக்கிறார், ஆபிரகாமை, தேவன் சிநேகிதன் என்றும், தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவன் என்றும், யோபுவை என் தாசனாகிய யோபு என்றும், தானியேலை மிகவும் பிரியமானவன் என்றும் அழைக்கிறார். இவர்களை மட்டுமன்றி இந்த உலகத்தில் படைத்த அனைவரையும் தேவன் பெயர்ச் சொல்லி அழைக்க விரும்புகிறார். தேவன் நம்மை அன்பாக பெயர்ச் சொல்லி அழைக்க வேண்டுமானால். நாம் சில அர்ப்பணிப்புகளை செய்வது அவசியமாயிருக்கிறது. 1.முதலாவது அதிகாலையிலே தேவனை துதிக்க வேண்டும். 2.தேவன் நமக்கு கொடுத்த புதைப் பொருளான வேதத்தை நன்றாக வாசிக்க வேண்டும். 3.தேவனின் பாதத்தில் அனுதினமும் நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டும் 4.எந்த காரியத்திலும் தேவனை முன்பாக நிறுத்த வேண்டும 5.எப்பொழுதும் தேவனை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும். 6.கடைசியாக, அவருடைய கற்பனைகளை தன்னுடைய வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும். இப்படியாக நாம் வாழ்வோமானால், தேவன் நம்மை என் பிரியமே என் ரூபவதியே என்று அன்புடன் அழைப்பார். கர்ததராகிய இயேசு தாமே இந்த வார்த்தையின் மூலம் நம் ஒவ்வொருவருடனும் இடைப்படுவாராக. ஆமென். Posted on: 16/08/2014 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதனத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் C ஏசா 53:5 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக. தாயின் அன்பிலும் மேலான அன்பு நம் தேவனின் அன்பு என்று சொன்னால் அது மிகையாகாது, இந்த உலகத்தில் தாயின் அன்பு என்பது மிகவும் ஆழமானது என்று நாம் அறிந்திருக்கிறோம் அதை நினைக்கும் போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது அதை உங்களிடத்தில் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஓர் ஊரில் சிறிய கிராமம் இருந்தது, அதன் அருகாமையில் ஓர் வனப்பகுதி இருந்தது, அது பசுமையும் செழிப்புமாக காணப்பட்டது. அங்கு அனேக மிருக ஜீவன்களும், பறவைகளும் வாழ்ந்து வந்தன, ஒரு நாள் திடீர் என அந்த வனப்பகுதியில் தீ பிடித்துக் கொண்டது, அந்த பகுதியில் உள்ள மக்கள் தீயணைப்புத்துறைக்கு போன் செய்தனர், காற்று அதிகமாகயிருந்தபடியினால் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ அந்த வனப்பகுதி முழுவதும் எரியத் தொடங்கியது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயர்ச்சித்தனர், அதே சமயத்தில் அனேகர் அவர்களுடன் உதவிச்செய்தனர். இப்படியாக சில மணிநேரம் போராடி தீயை அணைத்தனர், அப்படியிருந்தும் அந்த வனப்பகுதி முழுவதும் அழிந்துவிட்டது, ஆங்காங்கே சிறு சிறு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது, ஆனால் அவர்களில் ஒரு தீயணைப்பு வீரர் புதரின் உள்ளே சென்று தீயை அணைத்துக் கொண்டிருந்தார், அப்பொழுது திடீரென அங்குள்ள ஓர் புதரில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அவர் அங்குச் சென்று அந்த புதரை விலக்கினார், அப்போது அதிலிருந்து சில கோழிக்குஞ்சுகள் வெளியே வந்தன, அங்கி நின்றுக் கொண்டிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் இந்த பகுதி முழுவதும் எரிந்துவிட்டன, ஆனால் இந்தக் கோழிக்குஞ்சுகள் ஒரு சேதமுமின்றி வெளியே வருகின்றதே என்று அவர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த தீயணைப்பு வீரன் அந்த புதரிலிருந்து கருகி இறந்த நிலையில் ஒரு கோழியை வெளியே எடுத்தார். அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. ஆம் அந்த கோழியானாது தீமுழுவதையும் அது ஏற்றுக் கொண்டு தன் குஞ்சுகளுக்கு ஒரு சேதமும் வராதப்படிக் காப்பாற்றியது. நம் பாவங்களுக்காக தம் ஒரே பேரான குமாரனையே தந்தார் பரமபிதா, ஒரு குற்றமும் காணாத பரிசுத்தராகவே இருந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காகவே இந்த உலகத்தில் மனுஷகுமாரனாக வந்து நம்முடைய பாவம் என்கிற நெருப்பை அவர் மேல் ஏற்றுக் கொண்டு காயப்பட்டு, அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு சிலுவையில் தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்டு, நமக்கு ஒரு சேதமுமின்றி காப்பாற்றினார். இந்த கோழி சிறிது காலம் தன் குஞ்சுகள் வாழ்வதற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தது. ஆனால் நம்முடைய தேவனாகிய இயேசுவோ நம்முடைய இம்மை வாழ்விற்காக மாத்திரமல்ல, நம்முடைய மறுமையின் வாழ்வாகிய நித்திய ஜீவனுக்காக இப்படியாக தம்மை அர்ப்பணித்தார். ஆகவே எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே நாமும் இப்படிப்பட்ட அன்பைத் தரித்துக் கொள்வோம், அப்பொழுதுதான் நம்மை நித்திய ஜீவனுக்குப் பாத்திரராக மாற்ற முடியும் என்பதை மறக்க வேண்டாம். கர்த்தர்தாமே இந்த அழியாத அன்பினாலே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்.. Praise the Lord




வாலிபர் பகுதி: அஷோர் சீட்டு மடியிலே போடப்படும் காரிய சித்தியோ கர்த்தரால் வரும் நீதி:16:33 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக: எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே, ஒரு காரியம் ஜெயமாய் நடக்க வேண்டுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நாம் முயற்சிகளை எடுக்கலாம்,செயல்படலாம். ஆனால் அது கர்த்தராலே தான் வாய்க்கும் என்று அறிந்து கோள்ள வேண்டும். ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று எண்ணி எவ்வளவோ முயற்சிகள் நாம் எடுத்தாலும் அதை வாய்க்கபண்ணுவது கர்த்தர். “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா சங்கிதம் : 127:1 1) ஒரு காரியம் எப்பொழுது ஆசிர்வாதமாகயிருக்கும்: A)தேவசித்தம் B)தேவனுடைய வேளை வரவேண்டும் C)தேவனுடைய வழியிலே செயல்படவேண்டும் இவைகள் இருந்தால் தான் ஆசிர்வாதமாகயிருக்கமுடியும். அ) தேவ சித்தமாக இருக்கவேண்டும்: ஒரு காரியம் தேவசித்தமுள்ளதாயிருந்தால்அது அழகாக கூடி வரும். “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார் நமக்கு சித்தமான யாவையும் செய்கிறார் சங்கிதம்:115:3 கர்த்தர் தமது சித்தத்தை நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேற்றுவதற்காகவே ராஜரிகம் பண்ணுகிறார்.அவருக்குள் தாம் நாம் பிழைக்கிறோம் அசைகிறோம், இருக்கிறோம்[அப்:17:28] ஆகவே தான் இயேசு “ உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யபடுகிறது போல பூமியிலேயும் செய்யபடுவதாக” [மத்:6-10] என்று சீடர்க்ளூக்கு ஜெபம் பண்ண கற்றுகொடுத்தார். இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெபம் பண்ணிய பொழுது “அப்பா பிதாவே எல்லாம் உம்மாலே கூடும்: இந்த பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்து போடும்.ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்றார். [மாற்:14:36] ஆ) தேவனுடைய வேளை வரவேண்டும்: “நீதியை செய்ய கர்த்தருக்கு வேளை வந்த்து---[சங்:119:126] தேவனுடைய வேளையிலே காரியங்கள் கைகூடி வரும்.இயேசுகிறிஸ்துவின் முதல் அற்புதத்தை நாம் அறிந்திருக்கிறோம். கானாவூரில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டிற்கு இயேசு அழைக்கப்பட்டிருந்தார்.அந்த திருமண வீட்டிலே திராட்சைரசம் குறைவுபட்டது. அப்போது மரியாளோ, இயேசுவிடம் திரட்சைரசம் குறைவுப்பட்டது என்றார். அதற்கு இயேசு “ இன்னும் என் வேளை வரவில்லை” என்றார், பின்பு இயேசு அற்புதத்தை செய்தார். அந்த திருமண வீட்டில் தண்ணிரைத் திராட்சைரசமாக மாற்றி அங்கே பரிமாறச் செய்தார்[யோவான்:2-1-11] ஈ) தேவனுடைய வழியிலே செயல்படவேண்டும்: கடவுளூடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதின் மூலமும், அவருடைய நியமங்களை பின்பற்றுவதன் மூலமும் கடவுள் மீது நமக்குள்ள உண்மையான அன்பை காண்பிக்கிறோம். 1 யோவான் 5:3 நாம் எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும். நம்முடைய ஜெபத்தை விசுவாசமாகவும், மனத்தாழ்மையாகவும், உள்ளபூர்வமாகவும் இருக்கவேண்டும். [மாற்:11] “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்” லூக்:18:1 கடவுளுக்கு பிரியமில்லாத பழக்கவழக்கங்களை நாம் அறவே ஒதுக்கித்தள்ள வேண்டும்; 1 கொரி:6:9,10 தேவன் வெறுக்கிற காரியங்களை வெறுத்து அவர் விரும்புகிற காரியங்களை செய்யும் பொழுது அவருக்கு பிரியமாக நாம் வாழலாம் –ரோமர்: 12:9 ஒரு வேளை மனுஷ ஞானத்தினால் அல்லது பணபலத்தினால் சில காரியங்களை உலகத்தார் சாதித்து கொண்டிருக்கலாம் ஆனால் அது மாயமானது. ஆனால் தேவனால் கைகூடிவருகிற காரியம் ஆசிர்வாதம் நிறைந்த்தாய்க் காணப்படும்,சரியான வேளையிலே அவர் நமக்கு கட்டளையிடுவார்… ஆமென் Posted On: 09/05/2015 நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை நான் உங்களை தெரிந்து கொண்டேன்:நீங்கள் என் நாமத்தினாலே பிதாவை கேட்டுக் கொள்வது எதுவோ அதை உங்களுக்கு கொடுக்கதக்கதாக நீங்கள் போய் கனி கொடுக்கும் படிக்கும் உங்கள் கனி நிலைத்து இருக்கும் படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன் [யோவான் 15:16] எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே! எப்படியோ வாழந்து கொண்டிருந்த நம்மை தேவன் தெரிந்து கொண்டு அவரோடு நம்மை இணைத்து இருக்கிறார் என்று நினைத்தோமானால் தேவனுக்கு நாம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. நம்மை அவர் தெரிந்து கொண்டதுமின்றி நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்வது எதுவோ அதை அவர் உங்களுக்கு கொடுப்பார் என்று நம் தேவன் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை அவர் எப்போது கொடுப்பார் நாம் கனி கொடுக்கிறவர்களாகய் இருக்கும் போது அதை பெற்று கொள்ளமுடியும். நாம் தனித்து இருந்தோமானால் கனி கொடுக்கமுடியாது. நாம் தேவனோடு இணைந்திருந்தால் மாத்திரமே கனி கொடுக்கமுடியும் இதை தான் வேதாகமத்தில் பார்க்கிறோம் “என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன் கொடியானது திராட்சை செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனி கொடுக்கமுடியாது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்கமாட்டீர்கள்.[யோவான் 15-4] ஆகையால் நாம் எப்போதும் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும் நாம் தேவனோடு இணைந்திருந்தோமானால் தேவன் முதலில் நமக்கு சில கனிகளைக் கொடுப்பார் அது என்னவெனில் :ஆவியின் கனியோ அன்பு,சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்[கலா 6:22]இப்படிபட்ட கனிகள் பெற்றுக் கொண்ட நாம் எப்படிபட்டவர்களாக காணப்படவேண்டும்? பிறருடைய பாரங்களை சுமக்கிறவர் ஆக, பிறருக்காக ஜெபிக்கிறவர்களாக, தேவனுக்கு எதையாவது செய்கிறவர்களாகவும், ஒருவரில் ஒருவர் அன்பாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக தேசத்திற்காகவும், மக்களுக்காவும் ஜெபிக்க வேண்டும். இப்படிபட்ட கனிகள் பெற்ற நாம் எப்படிபட்டவர்களாக இருக்க வேண்டும் என நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறுகிறதாவது “நான் உங்களில் அன்பாயிருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது [யோவான் 15:12] நம் சகோதரரில் சிலர் சோர்ந்து காணப்படும்போது நம் சமயத்தை ஒதுக்கி அவர்களிடதில் சென்று அன்பான வார்த்தைகளை கொண்டு அவர்களிடத்தில் பேசுகிறோமா?! தேவனுடய அன்பை குறித்து சொல்லி அவர்களை தேற்றுகிறோமா சற்று யோசிப்போம்! நாம் இரட்சிக்கபட்ட காலத்தில் ஒவ்வொன்றுக்காக ஜெபித்தது உண்டு? நம் தேசத்திற்காக எவ்வளவு நேரம் ஜெபித்ததுண்டு? ஆனால் இப்பொழுது நம்முடைய ஜெபம் எப்படி இருக்கிறது? . நம் தேசத்தில் எங்கு பார்த்தாலும் பஞ்சம், நோய்கள், கொள்ளை, கொலை, விபத்து, என்று அனேக காரியங்களை பார்க்கிறோம். இதற்காக நேரத்தை ஒதுக்கி ஜெபிக்கிறோமா? நீங்கள் நினைக்கலாம் இவையெல்லாம் கேட்கும் போது தேவனுடய வருகையின் அடையாளம் என்று! ஆம் அது உண்மை தான், ஆனாலும் நாம் தேசத்திற்காகவும், தேசத்தின் மக்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். அவர்களும் தேவனை ஏற்றுகொள்ள வேண்டும்.தேவன் நமக்கு கனிகளை கொடுத்து இருப்பது நமக்காக மட்டுமன்றி அதை கொண்டு பிறருக்கும் உதவுகிறாதாய் இருக்க வேண்டும். தேவன் நமக்கு ஒன்று கொடுத்தால் அதை நாம் வர்த்திக்க பண்ண வேண்டும் அதை வாங்கி நமக்குள்ளே வைத்துக் கொள்வோமானால் அது நமக்கும் பிரயோஜனமாயிருக்காது பிறருக்கும் பிரயோஜனமாயிருக்காது. உதாரணத்திற்காக தாலந்தின் உவமை நினைத்து கொள்வோம். உள்ளவனுக்கு கொடுக்கப்படும் இல்லாதவனுக்கு உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே சகோதர,சகோதரிகளே, தேவனிடத்தில் கனிகளை பெற்றுக் கொண்ட நாம் இன்றிலிருந்து ஒர் தீர்மானம் எடுப்போம் தேவன் நமக்கு கொடுத்த கனிகளை பெருகச் செய்து தேவனுக்கென்று கனி கொடுக்கிறவர்களாய் மாறுவோம். நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார் எனக்கும் சீஷராயிருப்பீர்கள்[யோவான்:15:8] –ஆமென். Posted on: 23/02/2015 என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப் படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் – மத் 6:25 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக! கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நாம் அனேக காரியங்களை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அன்றாட தேவைகளை குறித்தும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதே சமயத்தில் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றிய கவலையும் பாரமும் காணப்படுகிறவர்களாகிய நமக்கு கவலையை மேற்கொள்ள பரிசுத்த வேதாகமம் சில வழிகளைக் காண்பிக்கிறது. இத்தகைய காரியத்தை நாம் வேதத்தைக் கொண்டு பார்ப்போம். 1.முதலாவது தேவன் மேல் வைத்த விசுவாசத்தினால் கவலையை மேற்கொள்ள முடியும் என்பதை பார்க்கலாம். கர்த்தராகிய இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறிவிடுகின்றோம், நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறின பின்பு நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு தேவைக்காகவும் நம்மைக் காட்டிலும் தேவன் நமக்காக கவலைப்படுகிறவராயிருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும். தேவன் மேல் வைக்கும் விசுவாசம் கவலைகள் அனைத்தையும் நம்மை விட்டு விலக்கிவிடும், அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்து நம் பாவத்திற்காக மட்டும் சிலுவையில் அறையப்பட்டார் என்று விசுவாசிப்பது மாத்திரமல்லாமல் அத்துடன் என்னுடைய தேவைகளையும் சந்திக்க வல்லவர் என்கிற விசுவாசமும் நமக்குத் தேவை. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கவலையை மறந்து விட்டு விசுவாசத்தை நோக்கி ஓட வேண்டாம் என்பதுதான் நம்மைக் குறித்து தேவனுடைய வாஞ்சையாயிருக்கிறது. ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள் – 1 பேதுரு 5:7, எனவே கவலைகளை ஒழித்து விட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர தேவனாகிய இயேசுவைப் பிடித்துக் கொள்வோம். 2.இரண்டாவது ஜெபத்தைக் கொண்டு கவலைகளை எடுத்துப் போடுவோம். வேதம் இப்படியாக சொல்லுகிறது, ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் – பிலி 4:6 நாம் தேவனை நோக்கி ஜெபிக்கிறோம், விண்ணப்பம் செய்கிறோம் ஆனாலும் திரும்பவும் எந்தக் காரியத்துக்காக ஜெபித்தோமோ அதே காரியத்தைக் குறித்து கவலைப்பட்டு, பாரப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற அவிசுவாசமே நம்முடைய கவலைக்கும் பாரத்துக்கும் காரணமாய் அமைந்து விடுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வேதம் சொல்லுகிறது, கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு அவர் உன்னை ஆதரிப்பார் – சங் 55:22 ஆகவே கவலைப்பட வேண்டாம், கலங்க வேண்டாம் கர்த்தரே சொல்லி விட்டார் நான் உங்கள் பாரங்களை சுமந்து கொள்கிறேன். நீங்கள் சும்மா இருங்கள் என்று சொல்வதை நாம் மேலே உள்ள வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. 3.மூன்றாவதாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் கவலைகளை எடுத்துப் போடுவோம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்பது ஜீவனுக்கும் தேவபக்திக்கும் தேவையான எல்லாவற்றையும் நமக்குத் தருகிறதாயிருக்கின்றது. அபிஷேகம் என்றதும் அனேகர் நினைப்பதுண்டு சத்தமிடுவதும் கைகளை தட்டுவதும், அன்னிய பாஷைகளைப் பேசுவதும் மட்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அனால் ஒரு தேவபிள்ளை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நிறைந்து உன்னதமான ஆவிக்குரிய வாழ்க்கையை வாழும் போது மட்டுமே அந்த அபிஷேகத்தால் நம்முடைய கவலைகள் பாரங்கள் எல்லாம் மாறிப் போகும். அதுமட்டுமல்லாமல் தேவனோடு கூடிய சந்தோஷமும் நிலைத்திருக்கும். இப்படியாக இருக்கும் போது மட்டுமே நம்முடைய உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டுக் கொண்டேயிருப்பான். அதுமட்டுமல்லாமல் தேவனை நாம் முழுமனதோடு துதிக்க முடியும், மற்றவரை பெலப்படுத்த முடியும் என்பதாக அனேக காரியங்களை நாம் வேதத்தில் இருந்து பார்க்க முடிகிறது, எனக்கு அருமையான சகோதர சகோதரிகளே கவலைப் படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்டுவான் [ மத் 6:27 ] ஆகவே கவலைப் படுவதை விட்டுவிட்டு கவலையிலிருந்து விடுதலையாக தேவன் நமக்கு தந்த வேதாகமத்தை கொண்டு ஜெயம் எடுப்போம். எப்பொழுது மேலே சொல்லப்பட்ட காரியம் நடக்குமென்றால், வேதம் சொல்லுகிறது, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் – சங்கீதம் 37:4. ஆமென் வாலிபர் பகுதி: அஷோர் Posted on: 12/01/2015 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் – பிலி 4:4 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக, எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே தேவனுடைய பிறப்பின் நாளை கொண்டாடி விட்டு, புது வருஷத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதுவருடத்தில் தேவனிடத்திலிருந்து மாறாத வாக்குத்தத்தங்களையும், அவருடைய பரிசுத்த அன்பையும் பெற்றிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன். அடுத்ததாக எப்பொழுது இந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று காத்திருக்கிறவர்களுக்கு தேவன் சொல்லுகிற அறிவுரை என்னவெனில், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்ககடவோம். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் [ எபி 10:23 ] ஒருகாரியத்தை மறக்க வேண்டாம், நாம் தேவனுடைய பிள்ளைகள் ஆகவே தேவன் நிச்சயமாக நம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றுவார் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் சில வேளைகளில் சிறிது தாமதமாகும் சூழ்நிலை உண்டாகிறது ஏனென்றால் நாம் அவருடைய வழிகளை விட்டு இந்த உலகத்தேவைக்காக மாத்திரம் தேவனை தேடும் போது அவர் நமக்கு சில காரியங்களைக் கற்றுக் கொடுக்கும்படியாக இப்படி செய்கிறார் என்பதுதான் உண்மை. மறக்க வேண்டாம் நாம் இந்த உலகத்தின் செல்வத்தில் செழிப்பாக இருப்பதினால் மட்டும் நாம் பாக்கியவான்கள் என்று அழைக்கப்பட மாட்டோம். மாறாக வேதம் சொல்லுகிறது கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். [ சங் 1:2 ] இரட்சிக்கப்பட்ட போது நாம் எவ்வாறு தேவன் மேல் தாகமாய் இருந்தோமோ அதே தாகத்தை ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும், அப்பொழுதுதான் நாம் பிசாசின் தந்திரங்களைக் கண்டு பிடிப்பதுடன் மாத்திரமல்ல நம்முடைய விலையேறப் பெற்ற வாக்குத்தத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நம்முடைய நோக்கம் எல்லாம் எப்பொழுதும் இயேசு இயேசு என்று கடைசி மூச்சு வரை சொல்லிக் கொண்டே நடப்போம். வேதம் சொல்லுகிறது, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் – சங் 37:4 தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்போது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் – மாற்கு 11:24 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக, எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே நீங்கள் ஜெபிக்கும் போது நான் ஜெபித்தக் காரியங்கள் எல்லாம் பெற்றுக் கொள்வேன் என்று விசுவாசியுங்கள் அப்போது அவைகள் உங்களுக்கு உண்டாகும். இவைகள் எப்போது நடக்கும் என்றால் நீங்கள் கர்த்தருக்குள் இருக்கும்போது மட்டுமே நடக்கும் என்பதை மறக்க வேண்டாம். வேதத்தில் இப்படியாக பார்க்கிறோம், வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை [ மத்தேயு 24:35 ] இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் அவர் இப்படியாக தன்னை தேடி வருகிறவர்கள் தன்னை விசுவாசிக்கும் படியாக இந்த வசனத்தை சொல்வதை பார்க்க முடிகிறது, இப்படி விசுவாசிக்கிறவர்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொண்டதை நாம் பார்க்க முடிகிறது உதாரணமாக பன்னிரண்டு வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக் கொண்டு அவர் பின்னாலே வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள் [மத் 9:20,21] அந்த ஸ்திரீயின் விசுவாசத்தை பாருங்கள் தேவனின் உடையில் இருந்து வல்லமை புறப்படும் என்பதை அவள் விசுவாசித்ததால் அதன்படியே அவள் அற்புதத்தை பெற்றுக் கொண்டாள் அதுமட்டுமன்றி அவள் தெரிந்து கொண்டதை பிறருக்கும் கற்றுக் கொடுத்தாள் என்பதையும், மேலும் நாம் மத் 14:36 அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாக வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டார்கள் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். அனேகருடைய விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணினாள். இரண்டாவதாக நூற்றுக்கு அதிபதியை எடுத்துக் கொள்வோம் தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் வைத்தான் எப்படியெனில் அவனுடைய வேலைக்காரன் கொடிய நோய்யினால் வேதனைப்படுகிறான். இதன் நிமித்தம் இயேசுவை வேண்டிக் கொண்டான் அதற்கு இயேசுவும் நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார். ஆனால் அவன் விசுவாசத்தைப் பாருங்கள் ஆண்டவரே நீர் என் வீட்டிற்கு பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்போது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான். ஆம் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே நாம் தேவனிடத்தில் எவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோமோ அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசிக்க வேண்டும் விசுவாசம் என்பது ஜெபத்தில் ஆணிவேர் என்பதை மறக்க கூடாது. வேதம் இப்படியாக சொல்லுகிறது விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும் [ எபிரெயர் 11:6 ] ஆகவே விசுவாசத்தோடு ஜெபிப்போம், ஒருவருக்கொருவர் பாரப்பட்டு ஜெபிப்போம் ஜெயத்தைப் பெற்றுக் கொள்வோம். கர்த்தர் தாமே இந்த வார்த்தையைக் கொண்டு உங்கள் இருதயங்களில் இடைப்படுவாராக. ஆமென். Posted on: 15/11/2014 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான் – மத் 16:26 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக. எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொள்வது மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலே சொல்லப்பட்ட வசனத்தை நாம் இரண்டு விதத்தில் நாம் பார்க்க போகிறோம் 1.உலகப் பிரகாரம் 2.ஆவிக்குரிய பிரகாரம் 1.உலகப் பிரகாரம் இந்த உலகத்தில் வாழ்கின்ற காலக் கட்டத்தில் பணத்திற்காகவும் பொருளுக்காகவும் ஓடி வேலை செய்து இந்த உலகத்தை ஆதாயப் படுத்திக் கொண்டாலும் தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை கொடுக்காமல் தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் நியாயத்தீர்ப்பு நாளில் தேவ சமுகத்தில் நிற்கும் போது பணத்தையோ அல்லது பொருளையோ கொடுத்து பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது, அநேகர் நினைப்பதுண்டு வேலை செய்து அதிகமாக சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொண்டோமானால் நன்றாக இருக்கலாம் என எண்ணி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் பணமும் பொருட்களும் தேவை தான். அது தவறில்லை ஆனால் அதை மட்டுமே சார்ந்து வாழ்ந்துக் கொண்டு தேவ சமுகத்தை விட்டு விலகும் போது தன் ஜீவனை நஷ்டப் படுத்திக் கொள்கிறான். தேவன் நம்மை இதற்காக மட்டும் படைக்கவில்லை. 2.ஆவிக்குரிய பிரகாரம் மனுஷன் இந்த உலகத்தில் ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொண்டாலும் அவன் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு அதன் நிமித்தம் ஒரு லாபமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சென்னையிலிருக்கும் போது சபையிலே ஒரு சிலரைப் பார்த்தேன் அவர்கள் சபைக்குரிய காரியங்களில் நன்கு வளர்ந்தவராக காணப்பட்டார்கள் அதுமட்டுமன்றி சபைக்கு ஆத்துமாக்களைச் சேர்க்கிறவர்களாகவும், தெருக்களில் சென்று ட்ராக்ஸ் கொடுக்கிறவர்களாகவும் காணப்படுகிறார்கள் ஆனால் அவர்கள் வாழ்கின்ற இடத்தில் சென்றுப் பார்க்கும் போது அவர்கள் சிலரை அவதூறாக பேசுகிறவர்களாகவும் காணப்பட்டனர். அனேகரை தேவ சமுகத்தில் சேர்க்கிறவர்களாக காணப்படுகிற அவர்கள் முதலில் தான் சரியான நிலையில் தான் இருக்கிறோமா என்பதை அறிய வேண்டும். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது ஒரே ஊற்றிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? அதுமட்டுமல்லாமல் துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது, என் சகோதரரே இப்படியிருக்கலாகாது [ யாக் 3:11,10 ] ஆம் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனுக்கென்று கொடுக்க வேண்டிய நேரத்தை தேவனுக்கென்று கொடுக்க ஆயத்தப் படுவோம். வேதத்தில் பார்க்கிறோம் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் [ லூக் 20:25 ] என்று தேவன் இந்த உலகத்தில் வாழ்ந்த காலக் கட்டத்தில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். தன் ஜீவனை காக்க தேவனுக்கென்று நேரத்தை ஒதுக்கவும் ஊழியத்திலிருக்கும் சகோதர சகோதரிகளும் சற்று தன்னைத் தான் நிதானித்து அறிய வேண்டும். முதலில் நம்மை பரலோகத்திற்கு தகுதி படுத்திக் கொண்டு பிறகு மற்றவரையும் ஆயத்தப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். கர்த்தர் தாமே இந்த வார்த்தையை கொண்டு நம்முடன் பேசுவாராக ஆமென். Posted on: 09/10/2014 அவரோ அவர்களை அழிக்காமல் இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார், அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல் அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார் C சங் 78:38 குறிப்பு: நாம் எப்பொழுதும் தேவனுடைய கோபத்தை தனிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே தேவன் ஒரு நபரையோ அல்லது தேசத்தையோ நேசிக்கிறார் என்றால், அவர்கள் சிறிய தவறு செய்தால் கூட தேவன் உடனே சரி செய்வார். ஏனென்றால் ஒரு மனுஷனிடம் துன்மார்க்கமான காரியங்கள் வரும் போது நாம் அவருடன் உலாவ முடியாது என்று வேதம் சொல்லுகிறது, ஏனென்றால் அவர் தீமையைப் பார்க்கமாட்டாத சுத்த கண்ணராய் இருக்கிறார் என்பதை ஒரு போது மறக்க வேண்டாம். இத்தகயை காரியத்தைத் தான் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். யோனா அதிகாரத்தை பார்ப்பீர்களால் தெரியும் அவர் நினிவேயை எவ்வாறாக நேசித்தார், ஆகவேதான் நினிவே தவறு செய்த போது, அவர் ஒரு யோனாவை தெரிந்து கொண்டு அங்கே அனுப்புகிறார். ஆனால் யோனாவோ கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்கு போகிற ஒரு கப்பலைக் கண்டு கூலி கொடுத்து தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி அவர்களோடே தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறினான் [யோன-3] கர்த்தர் நினிவேயை நேசித்ததின் நிமித்தம் யோனாவை சிட்சித்தார் என்பதை அதே அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம், எப்படியென்றால் கடலில் பெருங்காற்றை வரவழைத்து கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமன்றி யோனாவை மீனின் வயிற்றிலே இராப்பகல் மூன்று நாள் இருக்க வைத்தார், அப்பொழுது யோனா தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தார். தேவன் யோனாவின் விண்ணப்பத்தை கேட்டு , மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது, யோனாவும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். யோனாவுக்கு தேவனுடைய வார்த்தை இரண்டாம் தரம் உண்டாகி நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய் நான் உனக்கு கற்பிக்கும் வர்த்தையை அதற்கு விரோதமாய் பிரசங்கி என்றார். அவனும் பிரசங்கித்தான், அப்போது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து ஏற்றுக் கொண்டு அக்கிரமத்தை விட்டு விலகி தேவனை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்கள் கிரியைகளைப் பார்த்து தெரிந்து கொண்டார், ஆகவே தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு அதைச் செய்யாதிருந்தார். [ யோனா 3:10 ] ஆனால் யோனாவிற்கோ தேவன் செய்தது பிரியமில்லாமல் இருந்தது. ஆனால் இந்த தவறை ஒரு செடியைக் கொண்டு உணர்த்தினார் என்பதை நாம் யோனா புஸ்தகத்தில் கடைசி அதிகாரத்தைப் பார்க்கும் போது அறிய முடிகிறது. ஆம் பிரியமானவர்களே, தேவன் நம்மையும் இந்த தேசத்திற்கு கொண்டுவந்ததற்கு ஒரு நோக்கம் உண்டு. முதலாவது நாம் தேவனுடைய குறிக்கோளை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். நாம் இந்த நோக்கத்தை அறியாமல் நடப்பதினால் தான் தேவன் நம்மை சிட்சிக்கிறார் என்பதை ஒருபோது மறக்க கூடாது. சிலர் இதை அறியாமல் தேவன் என்னை ஏன் தண்டிக்கிறார் என்று தேவனையே குறை சொல்வதுண்டு. தேவனுடைய ஒவ்வொரு சிட்சைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வேதம் சொல்லுகிறது என் மகனே நீ கர்ததருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே அவர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள் 3:10,11 கர்த்தராகிய இயேசு தாமே இந்த வார்த்தையின் மூலம் நம் ஒவ்வொருவருடனும் இடைப்படுவாராக. ஆமென். Posted on: 07/09/2014 என் வாக்குக்குச் செவிகொடுங்கள் அப்போது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் C எரேமியா 7:23 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக! எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனுடைய வார்ததைக்கு நாம் செவிக் கொடுக்கும் போது தேவன் நம் மேல் பிரியமாயிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் நம்மை தமக்கு தாசனாகவும், சிநேகிதனாகவும் தெரிந்துக் கொள்கிறார் வேதத்தில் தேவன் இப்படியாக சொல்லுகிறார். என் தாசனாகிய இஸ்ரவேலே நான் தெரிந்துக் கொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் நான் உன்னை வெறித்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் திகையாதே நான் உன் தேவன் என்று தமக்குச் செவிக் கொடுக்கிறவர்களைப் பார்த்து தேவன் ஏசாயா 41:8-10ல் இவ்வாறாக சொல்லுகிறார், மேலே சொன்ன வசனத்தை உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன். வேதத்தில் தேவனுக்கு பிரியமாகயிருந்தவர்களை தேவன் எவ்வாறு அழைக்கிறார் என்று சற்று பார்ப்போம். 1.ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவனை விசுவாசித்ததின் நிமித்தம் ஆபிரகாமை தேவன் ஆசீர்வதித்தார் மேலும் அவர் மூலமாய் உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று நாம் ஆதியாகமம் 22:18ல் வாசிக்கிறோம், அதுமட்டுமன்றி அவர் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான் என்பதை நாம் யாக்கோபு 2:23ல் பார்க்க முடிகிறது. 2.தாவீதை எடுத்துக் கொள்வோம் தேவன் மேல் நம்பிக்கையுள்ளவனாக காணப்பட்டான் அதுமட்டுமல்லாமல் வைராக்கியம் நிறைந்தவனாகவும் தேவனை தனக்கு முன்பாக வைத்து எல்லாவற்றையும் செய்ததினிமித்தம் நாற்பது வருஷகாலமாய் ராஜாவாக இருந்த சவுலை தேவன் தள்ளி தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். பின்னும் அவனை குறித்து என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சாட்சியும் சொன்னார் என்பதை நாம் அப் 13:22ல் பார்க்க முடிகிறது. 3.யோபுவை எடுத்துக் கொள்வோம் நாம் யோபுவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் முதல் வசனத்தை திருப்பும் போது, அந்த வசனம் இப்படியாக சொல்லுகிறது, யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும் மற்றும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான் என்று அவரைப் பற்றி தேவன் சாட்சிக் கொடுக்கிறார். பாருங்கள் வசனம் என்ன சொல்லுகிறது, என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவரைப் போல பூமியில் ஒருவனும் இல்லை என்பதை யோபு 1:8ல் பார்க்க முடிகிறது. 4.கடைசியாக, தானியேலை எடுத்துக் கொள்வோம் இவர் மிகவும் வைராக்கியம் நிறைந்த மனிதன் எப்படியெனில் ராஜா உண்ணும் போஜனத்தினாலும், திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுபடுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான் என்பதை தானியேல் 1:8ல் நாம் வாசிக்க முடிகிறது.ஆகவே தேவன் தானியேலைக் குறித்து இவ்வாறாக சாட்சிக் கொடுக்கிறார், நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்று தானியேல் 9:23ல் வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆம் பிரியமானவர்களே, முதலாவது தேவனுக்கு பிரியமாக வாழ்வதற்கு முயற்சி செய்வது அவசியம். இப்படியாக நாம் வாழும் போது மட்டுமே வாழ்க்கையில் அதிக பலன்களை பெறமுடியும். பாருங்கள் மேலே குறிப்பிடப்பட்ட தாசர்கள் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்ததால், தேவன் அவர்களை இவ்வாறாக அழைக்கிறார், ஆபிரகாமை, தேவன் சிநேகிதன் என்றும், தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவன் என்றும், யோபுவை என் தாசனாகிய யோபு என்றும், தானியேலை மிகவும் பிரியமானவன் என்றும் அழைக்கிறார். இவர்களை மட்டுமன்றி இந்த உலகத்தில் படைத்த அனைவரையும் தேவன் பெயர்ச் சொல்லி அழைக்க விரும்புகிறார். தேவன் நம்மை அன்பாக பெயர்ச் சொல்லி அழைக்க வேண்டுமானால். நாம் சில அர்ப்பணிப்புகளை செய்வது அவசியமாயிருக்கிறது. 1.முதலாவது அதிகாலையிலே தேவனை துதிக்க வேண்டும். 2.தேவன் நமக்கு கொடுத்த புதைப் பொருளான வேதத்தை நன்றாக வாசிக்க வேண்டும். 3.தேவனின் பாதத்தில் அனுதினமும் நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டும் 4.எந்த காரியத்திலும் தேவனை முன்பாக நிறுத்த வேண்டும 5.எப்பொழுதும் தேவனை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும். 6.கடைசியாக, அவருடைய கற்பனைகளை தன்னுடைய வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும். இப்படியாக நாம் வாழ்வோமானால், தேவன் நம்மை என் பிரியமே என் ரூபவதியே என்று அன்புடன் அழைப்பார். கர்ததராகிய இயேசு தாமே இந்த வார்த்தையின் மூலம் நம் ஒவ்வொருவருடனும் இடைப்படுவாராக. ஆமென். Posted on: 16/08/2014 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதனத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் C ஏசா 53:5 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக. தாயின் அன்பிலும் மேலான அன்பு நம் தேவனின் அன்பு என்று சொன்னால் அது மிகையாகாது, இந்த உலகத்தில் தாயின் அன்பு என்பது மிகவும் ஆழமானது என்று நாம் அறிந்திருக்கிறோம் அதை நினைக்கும் போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது அதை உங்களிடத்தில் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஓர் ஊரில் சிறிய கிராமம் இருந்தது, அதன் அருகாமையில் ஓர் வனப்பகுதி இருந்தது, அது பசுமையும் செழிப்புமாக காணப்பட்டது. அங்கு அனேக மிருக ஜீவன்களும், பறவைகளும் வாழ்ந்து வந்தன, ஒரு நாள் திடீர் என அந்த வனப்பகுதியில் தீ பிடித்துக் கொண்டது, அந்த பகுதியில் உள்ள மக்கள் தீயணைப்புத்துறைக்கு போன் செய்தனர், காற்று அதிகமாகயிருந்தபடியினால் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ அந்த வனப்பகுதி முழுவதும் எரியத் தொடங்கியது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயர்ச்சித்தனர், அதே சமயத்தில் அனேகர் அவர்களுடன் உதவிச்செய்தனர். இப்படியாக சில மணிநேரம் போராடி தீயை அணைத்தனர், அப்படியிருந்தும் அந்த வனப்பகுதி முழுவதும் அழிந்துவிட்டது, ஆங்காங்கே சிறு சிறு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது, ஆனால் அவர்களில் ஒரு தீயணைப்பு வீரர் புதரின் உள்ளே சென்று தீயை அணைத்துக் கொண்டிருந்தார், அப்பொழுது திடீரென அங்குள்ள ஓர் புதரில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அவர் அங்குச் சென்று அந்த புதரை விலக்கினார், அப்போது அதிலிருந்து சில கோழிக்குஞ்சுகள் வெளியே வந்தன, அங்கி நின்றுக் கொண்டிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் இந்த பகுதி முழுவதும் எரிந்துவிட்டன, ஆனால் இந்தக் கோழிக்குஞ்சுகள் ஒரு சேதமுமின்றி வெளியே வருகின்றதே என்று அவர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த தீயணைப்பு வீரன் அந்த புதரிலிருந்து கருகி இறந்த நிலையில் ஒரு கோழியை வெளியே எடுத்தார். அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. ஆம் அந்த கோழியானாது தீமுழுவதையும் அது ஏற்றுக் கொண்டு தன் குஞ்சுகளுக்கு ஒரு சேதமும் வராதப்படிக் காப்பாற்றியது. நம் பாவங்களுக்காக தம் ஒரே பேரான குமாரனையே தந்தார் பரமபிதா, ஒரு குற்றமும் காணாத பரிசுத்தராகவே இருந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காகவே இந்த உலகத்தில் மனுஷகுமாரனாக வந்து நம்முடைய பாவம் என்கிற நெருப்பை அவர் மேல் ஏற்றுக் கொண்டு காயப்பட்டு, அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு சிலுவையில் தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்டு, நமக்கு ஒரு சேதமுமின்றி காப்பாற்றினார். இந்த கோழி சிறிது காலம் தன் குஞ்சுகள் வாழ்வதற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தது. ஆனால் நம்முடைய தேவனாகிய இயேசுவோ நம்முடைய இம்மை வாழ்விற்காக மாத்திரமல்ல, நம்முடைய மறுமையின் வாழ்வாகிய நித்திய ஜீவனுக்காக இப்படியாக தம்மை அர்ப்பணித்தார். ஆகவே எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே நாமும் இப்படிப்பட்ட அன்பைத் தரித்துக் கொள்வோம், அப்பொழுதுதான் நம்மை நித்திய ஜீவனுக்குப் பாத்திரராக மாற்ற முடியும் என்பதை மறக்க வேண்டாம். கர்த்தர்தாமே இந்த அழியாத அன்பினாலே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்..
The Bible

Stjohns church, Mission kovil street, Arumuganeri
Submit Request